குறள் 621-630 இடுக்கணழியாமை

குறள் 621:.
இடுக்கண் வருங்கால் நகுக அதனை 
அடுத்தூர்வது அஃதொப்ப தில்.

Tamil meaning
சோதனைகளை எதிர்த்து வெல்லக் கூடியது, அந்தச் சோதனைகளைக் கண்டு கலங்காமல் மகிழ்வுடன் இருக்கும் மனம்தான். 

English meaning
If troubles come, laugh; there is nothing like that, to press upon and drive away sorrow. 

குறள் 622:.
வெள்ளத் தனைய இடும்பை அறிவுடையான் 
உள்ளத்தின் உள்ளக் கெடும்.

Tamil meaning
வெள்ளம்போல் துன்பம் வந்தாலும் அதனை வெல்லும் வழி யாது என்பதை அறிவுடையவர்கள் நினைத்த மாத்திரத்திலேயே அத்துன்பம் விலகி ஓடி விடும். 

English meaning
A flood of troubles will be overcome by the (courageous) thought which the minds of the wise will entertain, even in sorrow. 

குறள் 623:.
இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு 
இடும்பை படாஅ தவர்.

Tamil meaning
துன்பம் சூழும் போது, துவண்டு போகாதவர்கள் அந்தத் துன்பத்தையே துன்பத்தில் ஆழ்த்தி அதனைத் தோல்வியுறச் செய்வார்கள். 

English meaning
They give sorrow to sorrow, who in sorrow do not suffer sorrow. 

குறள் 624:.
மடுத்தவா யெல்லம் பகடன்னான் உற்ற 
இடுக்கண் இடர்ப்பாடு உடைத்து.

Tamil meaning
தடங்கல் நிறைந்த கரடுமுரடான பாதையில் பெரும் பாரத்தை எருது இழுத்துக் கொண்டு போவது போல, விடா முயற்சியுடன் செயல்பட்டால் துன்பங்களுக்கு முடிவு ஏற்பட்டு வெற்றி கிட்டும். 

English meaning
Troubles will vanish (i.e., will be troubled) before the man who (struggles against difficulties) as a buffalo (drawing a cart) through deep mire. 

குறள் 625:.
அடுக்கி வரினும் அழிவிலான் உற்ற 
இடுக்கண் இடுக்கட் படும்.

Tamil meaning
துன்பங்களைக் கண்டு கலங்காதவனை, விடாமல் தொடரும் துன்பங்கள், துன்பப்பட்டு அழிந்து விடும். 

English meaning
The troubles of that man will be troubled (and disappear) who, however thickly they may come upon him, does not abandon (his purpose). 

குறள் 626:.
அற்றேமென்று அல்லற் படுபவோ பெற்றேமென்று 
ஓம்புதல் தேற்றா தவர்.

Tamil meaning
இத்தனை வளத்தையும் பெற்றுள்ளோமே யென்று மகிழந்து அதைக் காத்திட வேண்டுமென்று கருதாதவர்கள் அந்த வளத்தை இழக்க நேரிடும் போது மட்டும் அதற்காகத் துவண்டு போய் விடுவார்களா? 

English meaning
Will those men ever cry out in sorrow, "we are destitute" who, (in their prosperity), give not way to (undue desire) to keep their wealth. 

குறள் 627:.
இலக்கம் உடம்பிடும்பைக் கென்று கலக்கத்தைக் 
கையாறாக் கொள்ளாதாம் மேல்.

Tamil meaning
துன்பம் என்பது உயிருக்கும் உடலுக்கும் இயல்பானதே என்பதை உணர்ந்த பெரியோர், துன்பம் வரும் போது அதனைத் துன்பமாகவே கருத மாட்டார்கள்.

English meaning
The great will not regard trouble as trouble, knowing that the body is the butt of trouble. 

குறள் 628:.
இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான் 
துன்பம் உறுதல் இலன்.

Tamil meaning
இன்பத்தைத் தேடி அலையாமல், துன்பம் வந்தாலும் அதை இயல்பாகக் கருதிப்கொள்பவன் அந்தத் துன்பத்தினால் துவண்டு போவதில்லை. 

English meaning
That man never experiences sorrow, who does not seek for pleasure, and who considers distress to be natural (to man). 

குறள் 629:.
இன்பத்துள் இன்பம் விழையாதான் துன்பத்துள் 
துன்பம் உறுதல் இலன்.

Tamil meaning
இன்பம் வரும் பொழுது அதற்காக ஆட்டம் போடாதவர்கள், துன்பம் வரும் பொழுதும் அதற்காக வாட்டம் கொள்ள மாட்டார்கள். இரண்டையும் ஒன்றுபோல் கருதும் உறுதிக்கு இது எடுத்துக்காட்டு. 

English meaning
He does not suffer sorrow, in sorrow who does not look for pleasure in pleasure.

குறள் 630:.
இன்னாமை இன்பம் எனக்கொளின் ஆகுந்தன் 
ஒன்னார் விழையுஞ் சிறப்பு.

Tamil meaning
துன்பத்தை இன்பமாகக் கருதும் மனஉறுதி கொண்டவர்களுக்கு, அவர்களது பகைவர்களும் பாராட்டுகிற பெருமை வந்து சேரும். 

English meaning
The elevation, which even his enemies will esteem, will be gained by him, who regards pain as pleasure.

No comments:

Post a Comment