குறள் 1001-1010 நன்றியில்செல்வம்

குறள் 1001:.
வைத்தான்வாய் சான்ற பெரும்பொருள் அஃதுண்ணான் 
செத்தான் செயக்கிடந்தது இல்.

Tamil meaning
அடங்காத ஆசையினால் வீடு கொள்ளாத அளவுக்குச் செல்வத்தைச் சேர்த்து வைத்து அதனை அனுபவிக்காமல் செத்துப் போகிறவனுக்கு, அப்படிச் சேர்க்கப்பட்ட செல்வத்தினால் என்ன பயன்? 

English meaning
He who does not enjoy the immense riches he has heaped up in his house, is (to be reckoned as) dead, (for) there is nothing achieved (by him). 

குறள் 1002:.
பொருளானாம் எல்லாமென்று ஈயாது இவறும் 
மருளானாம் மாணாப் பிறப்பு.

Tamil meaning
யாருக்கும் எதுவும் கொடுக்காமல், தன்னிடமுள்ள பொருளால் எல்லாம் ஆகுமென்று, அதனைவிடாமல் பற்றிக் கொண்டிருப்பவன் எந்தச் சிறப்புமில்லாத இழி பிறவியாவான். 

English meaning
He who knows that wealth yields every pleasure and yet is so blind as to lead miserly life will be born a demon.

குறள் 1003:.
ஈட்டம் இவறி இசைவேண்டா ஆடவர் 
தோற்றம் நிலக்குப் பொறை.

Tamil meaning
புகழை விரும்பாமல் பொருள் சேர்ப்பது ஒன்றிலேயே குறியாக இருப்பவர்கள் பிறந்து வாழ்வதே இந்தப் பூமிக்குப் பெரும் சுமையாகும். 

English meaning
A burden to the earth are men bent on the acquisition of riches and not (true) fame. 

குறள் 1004:.
எச்சமென்று என்எண்ணுங் கொல்லோ ஒருவரால் 
நச்சப் படாஅ தவன்.

Tamil meaning
யாராலும் விரும்பப்படாத ஒருவன், தன் மரணத்திற்குப் பிறகு எஞ்சி நிற்கப் போவது என்று எதனை நினைத்திட முடியும்? 

English meaning
What will the miser who is not liked (by any one) regard as his own (in the world to come)

குறள் 1005:.
கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க்கு அடுக்கிய 
கோடியுண் டாயினும் இல்.

Tamil meaning
கொடுத்து உதவும் பண்பினால் இன்பமுறும் இயல்பு இல்லாதவரிடம், கோடி கோடியாகச் செல்வம் குவிந்தாலும் அதனால் பயன் எதுவுமில்லை. 

English meaning
Those who neither give (to others) nor enjoy (their property) are (truly) destitute, though possessing immense riches. 

குறள் 1006:.
ஏதம் பெருஞ்செல்வம் தான்துவ்வான் தக்கார்க்கொன்று 
ஈதல் இயல்பிலா தான்.

Tamil meaning
தானும் அனுபவிக்காமல் தக்கவர்களுக்கு உதவிடும் இயல்பும் இல்லாமல் வாழ்கிறவன், தன்னிடமுள்ள பெருஞ்செல்வத்தைத் தொற்றிக்கொண்ட நோயாவான். 

English meaning
He who enjoys not (his riches) nor relieves the wants of the worthy is a disease to his wealth. 

குறள் 1007:.
அற்றார்க்கொன்று ஆற்றாதான் செல்வம் மிகநலம் 
பெற்றாள் தமியள்மூத் தற்று.

Tamil meaning
வறியவர்க்கு எதுவும் வழங்கி உதவாதவனுடைய செல்வம், மிகுந்த அழகியொருத்தி, தன்னந்தனியாகவே இருந்து முதுமையடைவதைப் போன்றது. 

English meaning
The wealth of him who never bestows anything on the destitute is like a woman of beauty growing old without a husband. 

குறள் 1008:.
நச்சப் படாதவன் செல்வம் நடுவூருள் 
நச்சு மரம்பழுத் தற்று.

Tamil meaning
வெறுக்கப்படுகிறவரிடம் குவிந்துள்ள செல்வமும், ஊர் நடுவே நச்சு மரத்தில் காய்த்துக் குலுங்குகின்ற பழமும் வெவ்வேறானவையல்ல! 

English meaning
The wealth of him who is disliked (by all) is like the fruit-bearing of the etty tree in the midst of a town. 

குறள் 1009:.
அன்பொரீஇத் தற்செற்று அறநோக்காது ஈட்டிய 
ஒண்பொருள் கொள்வார் பிறர்.

Tamil meaning
அன்பெனும் பண்பை அறவே நீக்கி, தன்னையும் வருத்திக் கொண்டு, அறவழிக்குப் புறம்பாகச் சேர்த்துக் குவித்திடும் செல்வத்தைப் பிறர் கொள்ளை கொண்டு போய் விடுவர். 

English meaning
Strangers will inherit the riches that have been acquired without regard for friendship, comfort and charity.

குறள் 1010:.
சீருடைச் செல்வர் சிறுதுனி மாரி 
வறங்கூர்ந் தனையது உடைத்து.

Tamil meaning
சிறந்த உள்ளம் கொண்ட செல்வர்களுக்கேற்படும் சிறிதளவு வறுமையின் நிழல்கூட, மழை பொய்த்து விட்டதற்கு ஒப்பானதாகும். 

English meaning
The short-lived poverty of those who are noble and rich is like the clouds becoming poor (for a while). 

No comments:

Post a Comment