குறள் 1021-1030 குடிசெயல்வகை

குறள் 1021:.
கருமம் செயஒருவன் கைதூவேன் என்னும் 
பெருமையின் பீடுடையது இல்.

Tamil meaning
உரிய கடமையைச் செய்வதில் சோர்வு காணாமல் எவனொருவன் முயற்சிகளை விடாமல் மேற்கொள்கிறானோ அந்தப் பெருமைக்கு மேலாக வேறொரு பெருமை கிடையாது. 

English meaning
There is no higher greatness than that of one saying. I will not cease in my effort (to raise my family). 

குறள் 1022:.
ஆள்வினையும் ஆன்ற அறிவும் எனஇரண்டின் 
நீள்வினையால் நீளும் குடி.

Tamil meaning
ஆழ்ந்த அறிவும், விடாமுயற்சியும் கொண்டு ஒருவன் அயராது பாடுபட்டால், அவனைச் சேர்ந்துள்ள குடிமக்களின் பெருமை உயரும். 

English meaning
One's family is raised by untiring perseverance in both effort and wise contrivances. 

குறள் 1023:.
குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம் 
மடிதற்றுத் தான்முந் துறும்.

Tamil meaning
தன்னைச் சேர்ந்த குடிமக்களை உயர்வடையச் செய்திட ஓயாது உழைப்பவனுக்குத் தெய்வச் செயல் எனக்கூறப்படும் இயற்கையின் ஆற்றல் கூட வரிந்து கட்டிக்கொண்டு வந்து துணைபுரியும். 

English meaning
The Deity will clothe itself and appear before him who resolves on raising his family. 

குறள் 1024:.
சூழாமல் தானே முடிவெய்தும் தம்குடியைத் 
தாழாது உஞற்று பவர்க்கு.

Tamil meaning
தம்மைச் சார்ந்த குடிகளை உயர்த்தும் செயல்களில் காலம் தாழ்த்தாமல் ஈடுபட்டு முயலுகிறவர்களுக்குத் தாமாகவே வெற்றிகள் வந்து குவிந்துவிடும். 

English meaning
Those who are prompt in their efforts (to better their family) need no deliberation, such efforts will of themselves succeed. 

குறள் 1025:.
குற்றம் இலனாய்க் குடிசெய்து வாழ்வானைச் 
சுற்றமாச் சுற்றும் உலகு.

Tamil meaning
குற்றமற்றவனாகவும், குடிமக்களின் நலத்திற்குப் பாடுபடுபவனாகவும் இருப்பவனைத் தமது உறவினனாகக் கருதி, மக்கள் சூழ்ந்து கொள்வார்கள். 

English meaning
People will eagerly seek the friendship of the prosperous soul who has raised his family without foul means.

குறள் 1026:.
நல்லாண்மை என்பது ஒருவற்குத் தான்பிறந்த 
இல்லாண்மை ஆக்கிக் கொளல்.

Tamil meaning
நல்ல முறையில் ஆளும் திறமை பெற்றவர், தான் பிறந்த குடிக்கே பெருமை சேர்ப்பவராவார். 

English meaning
A man's true manliness consists in making himself the head and benefactor of his family. 

குறள் 1027:.
அமரகத்து வன்கண்ணர் போலத் தமரகத்தும் 
ஆற்றுவார் மேற்றே பொறை.

Tamil meaning
போர்க்களத்தில் எதிர்ப்புகளைத் தாங்கிப் படை நடத்தும் பொறுப்பு அதற்கான ஆற்றல் படைத்தவர்களிடம் இருப்பது போலத்தான் குடிமக்களைக் காப்பாற்றி உயர்வடையச் செய்யும் பொறுப்பும் அவர்களைச் சேர்ந்த ஆற்றலாளர்களுக்கே உண்டு. 

English meaning
Like heroes in the battle-field, the burden (of protection etc.) is borne by those who are the most efficient in a family. 

குறள் 1028:.
குடிசெய்வார்க் கில்லை பருவம் மடிசெய்து 
மானங் கருதக் கெடும்.

Tamil meaning
தன்மீது நடத்தப்படும் இழிவான தாக்குதலைக் கண்டு கலங்கினாலோ, பணியாற்றக் காலம் வரட்டும் என்று சோர்வுடன் தயக்கம் காட்டினாலோ குடிமக்களின் நலன் சீர்குலைத்துவிடும். 

English meaning
As a family suffers by (one's) indolence and false dignity there is to be so season (good or bad) to those who strive to raise their family. 

குறள் 1029:.
இடும்பைக்கே கொள்கலம் கொல்லோ குடும்பத்தைக் 
குற்ற மறைப்பான் உடம்பு.

Tamil meaning
தன்னைச் சார்ந்துள்ள குடிகளுக்குத் துன்பம் வராமல் தடுத்துத் தொடர்ந்து அக்குடிகளைக் காப்பாற்ற முயலுகிற ஒருவன், துன்பத்தைத் தாங்கி கொள்ளவே பிறந்தவனாகப் போற்றப்படுவான். 

English meaning
Is it only to suffering that his body is exposed who undertakes to preserve his family from evil ? 

குறள் 1030:.
இடுக்கண்கால் கொன்றிட வீழும் அடுத்தூன்றும் 
நல்லாள் இலாத குடி.

Tamil meaning
வரும் துன்பத்தை எதிர் நின்று தாங்கக் கூடிய ஆற்றலுடையவர் இல்லாத குடியை அத்துன்பம், வென்று வீழ்த்திவிடும். 

English meaning
If there are none to prop up and maintain a family (in distress), it will fall at the stroke of the axe of misfortune. 

No comments:

Post a Comment