குறள் 1071-1080 கயமை

குறள் 1071:.
மக்களே போல்வர் கயவர் அவரன்ன 
ஒப்பாரி யாங்கண்ட தில்.

Tamil meaning
குணத்தில் கயவராக இருப்பர். ஆனால், நல்லவரைப் போலக் காட்டிக் கொள்வார். மனிதர்களிடம் மட்டும்தான் இப்படி இருவகையான நிலைகளை ஒரே உருவத்தில் காண முடியும்.

English meaning
The base resemble men perfectly (as regards form); and we have not seen such (exact) resemblance (among any other species). 

குறள் 1072:.
நன்றறி வாரிற் கயவர் திருவுடையர் 
நெஞ்சத்து அவலம் இலர்.

Tamil meaning
எப்போதும் நல்லவை பற்றியே சிந்தித்துக் கவலைப்பட்டுக் கொண்டிருப்பவர்களைவிட எதைப் பற்றியும் கவலைப்படாமலிருக்கும் கயவர்கள் ஒரு வகையில் பாக்கியசாலிகள்தான்! 

English meaning
The low enjoy more felicity than those who know what is good; for the former are not troubled with anxiety (as to the good). 

குறள் 1073:.
தேவர் அனையர் கயவர் அவருந்தாம் 
மேவன செய்தொழுக லான்.

Tamil meaning
புராணங்களில் வரும் தேவர்களைப் போல் மனம் விரும்பியதையெல்லாம் செய்யக்கூடியவர்கள் கயவர்கள் என்பதால், இருவரையும் சமமாகக் கருதலாம்.

English meaning
The base resemble the Gods; for the base act as they like. 

குறள் 1074:.
அகப்பட்டி ஆவாரைக் காணின் அவரின் 
மிகப்பட்டுச் செம்மாக்கும் கீழ்.

Tamil meaning
பண்பாடு இல்லாத கயவர்கள், தம்மைக் காட்டிலும் இழிவான குணமுடையோரைக் கண்டால், அவர்களைவிடத் தாம் சிறந்தவர்கள் என்ற கர்வம் கொள்வார்கள். 

English meaning
The base feels proud when he sees persons whose acts meaner than his own. 

குறள் 1075:.
அச்சமே கீழ்களது ஆசாரம் எச்சம் 
அவாவுண்டேல் உண்டாம் சிறிது.

Tamil meaning
தாங்கள் விரும்புவது கிடைக்கும் என்ற நிலையேற்படும்போது கீழ்மக்கள், தங்களை ஒழுக்கமுடையவர்கள் போலக் காட்டிக் கொள்வார்கள். மற்ற சமயங்களில் அவர்கள் பயத்தின் காரணமாக மட்டுமே ஓரளவு ஒழுக்கமுள்ளவர்களாக நடந்து கொள்வார்கள்.

English meaning
(The principle of) behaviour in the mean is chiefly fear; if not, hope of gain, to some extent. 

குறள் 1076:.
அறைபறை அன்னர் கயவர்தாம் கேட்ட 
மறைபிறர்க்கு உய்த்துரைக்க லான்.

Tamil meaning
மறைக்கப்பட வேண்டிய இரகசியம் ஒன்றைக் கேட்ட மாத்திரத்தில், ஓடிச் சென்று பிறருக்குச் சொல்லுகிற கயவர்களைத், தமுக்கு என்னும் கருவிக்கு ஒப்பிடலாம். 

English meaning
The base are like a drum that is beaten, for they unburden to others the secrets they have heard.

குறள் 1077:.
ஈர்ங்கை விதிரார் கயவர் கொடிறுடைக்கும் 
கூன்கையர் அல்லா தவர்க்கு.

Tamil meaning
கையை மடக்கிக் கன்னத்தில் ஒரு குத்துவிடுகின்ற முரடர்களுக்குக் கொடுப்பார்களேயல்லாமல், ஈகைக் குணமில்லாத கயவர்கள் ஏழை எளியோருக்காகத் தமது எச்சில் கைகைக்கூட உதற மாட்டார்கள். 

English meaning
The mean will not (even) shake off (what sticks to) their hands (soon after a meal) to any but those who would break their jaws with their clenched fists. 

குறள் 1078:.
சொல்லப் பயன்படுவர் சான்றோர் கரும்புபோல் 
கொல்லப் பயன்படும் கீழ்.

Tamil meaning
குறைகளைச் சொன்னவுடனே சான்றோரிடம் கோரி பயனைப் பெற முடியும், ஆனால் கயவரிடமோ கரும்பை நசுக்கிப் பிழிவதுபோல், போராடித்தான் கோரிய பயனைப் பெற முடியும்.

English meaning
The great bestow (their alms) as soon as they are informed; (but) the mean, like the sugar-cane, only when they are tortured to death. 

குறள் 1079:.
உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல் 
வடுக்காண வற்றாகும் கீழ்.

Tamil meaning
ஒருவர் உடுப்பதையும் உண்பதையும் கண்டுகூட பெறாமைப்படுகிற கயவன், அவர்மீது வேண்டுமென்றே குற்றம் கூறுவதில் வல்லவனாக இருப்பான்.

English meaning
The base will bring an evil (accusation) against others, as soon as he sees them (enjoying) good food and clothing. 

குறள் 1080:.
எற்றிற் குரியர் கயவரொன்று உற்றக்கால் 
விற்றற்கு உரியர் விரைந்து.

Tamil meaning
ஒரு துன்பம் வரும்போது அதிலிருந்து தப்பித்துக் கொள்ள, தம்மையே பிறரிடம் விற்றுவிடுகிற தகுதிதான் கயவர்களுக்குரிய தகுதியாகும். 

English meaning
The base will hasten to sell themselves as soon as a calamity has befallen them. For what else are they fitted.

No comments:

Post a Comment