குறள் 1141-1150 அலரறிவுறுத்தல்

குறள் 1141:.
அலரெழ ஆருயிர் நிற்கும் அதனைப் 
பலரறியார் பாக்கியத் தால்.

Tamil meaning
எம் காதலைப் பற்றிப் பழிதூற்றிப் பேசுவதால் அதுவே எம் காதல் கைகூட வாய்ப்பாக அமையும் என்ற நம்பிக்கையில் எம் உயிர் போகாமல் இருக்கிறது என்பதை ஊரார் அறிய மாட்டார்கள். 

English meaning
My precious life is saved by the raise of rumour, and this, to my good luck no others are aware of. 

குறள் 1142:.
மலரன்ன கண்ணாள் அருமை அறியாது 
அலரெமக்கு ஈந்ததிவ் வூர்.

Tamil meaning
அந்த மலர்விழியாளின் மாண்பினை உணராமல் எம்மிடையே காதல் என்று இவ்வூரார் பழித்துரைத்தது மறைமுக உதவியாகவே எமக்கு அமைந்தது. 

English meaning
Not knowing the value of her whose eyes are like flowers this town has got up a rumour about me.

குறள் 1143:.
உறாஅதோ ஊரறிந்த கெளவை அதனைப் 
பெறாஅது பெற்றன்ன நீர்த்து.

Tamil meaning
எமது காதலைப்பற்றி ஊரறியப் பேச்சு எழாதா? அந்தப் பேச்சு, இன்னும் எமக்குக் கிட்டாத காதல் கிட்டியது போன்று இன்பத்தைத் தரக்கூடியதாயிற்றே! 

English meaning
Will I not get a rumour that is known to the (whole) town ? For what I have not got is as if I had got it (already).

குறள் 1144:.
கவ்வையால் கவ்விது காமம் அதுவின்றேல் 
தவ்வென்னும் தன்மை இழந்து.

Tamil meaning
ஊரார் அலர் தூற்றுவதால் எம் காதல் வளர்கிறது; இல்லையேல் இக்காதல்கொடி வளமிழந்து வாடிப்போய் விடும்.

English meaning
Rumour increases the violence of my passion; without it it would grow weak and waste away. 

குறள் 1145:.
களித்தொறும் கள்ளுண்டல் வேட்டற்றால் காமம் 
வெளிப்படுந் தோறும் இனிது.

Tamil meaning
காதல் வெளிப்பட வெளிப்பட இனிமையாக இருப்பது கள்ளுண்டு மயங்க மயங்க அக்கள்ளையே விரும்புவது போன்றதாகும். 

English meaning
As drinking liquor is delightful (to one) whenever one is in mirth, so is lust delightful to me whenever it is the subject of rumour. 

குறள் 1146:.
கண்டது மன்னும் ஒருநாள் அலர்மன்னும் 
திங்களைப் பாம்புகொண் டற்று.

Tamil meaning
காதலர் சந்தித்துக் கொண்டது ஒரு நாள்தான் என்றாலும், சந்திரனைப் பாம்பு விழுங்குவதாகக் கற்பனையாகக் கூறப்படும் "கிரகணம்" எனும் நிகழ்ச்சியைப் போல அந்தச் சந்திப்பு ஊர் முழுவதும் அலராகப் பரவியது. 

English meaning
It was but a single day that I looked on (my lover); but the rumour thereof has spread like the seizure of the moon by the serpent. 

குறள் 1147:.
ஊரவர் கெளவை எருவாக அன்னைசொல் 
நீராக நீளும்இந் நோய்.

Tamil meaning
ஒருவரையொருவர் விரும்பி மலர்ந்த காதலானது ஊர்மக்கள் பேசும் பழிச்சொற்களை எருவாகவும், அன்னையின் கடுஞ்சொற்களை நீராகவும் கொண்டு வளருமே தவிரக் கருகிப் போய்விடாது. 

English meaning
This malady (of lust) is manured by the talk of women and watered by the (harsh) words of my mother

குறள் 1148:.
நெய்யால் எரிநுதுப்பேம் என்றற்றால் கெளவையால் 
காமம் நுதுப்பேம் எனல்.

Tamil meaning
ஊரார் பழிச்சொல்லுக்குப் பயந்து காதல் உணர்வு அடங்குவது என்பது, எரிகின்ற தீயை நெய்யை ஊற்றி அணைப்பதற்கு முயற்சி செய்வதைப் போன்றதாகும். 

English meaning
To say that one could extinguish passion by rumour is like extinguishing fire with ghee. 

குறள் 1149:.
அலர்நாண ஒல்வதோ அஞ்சலோம்பு என்றார் 
பலர்நாண நீத்தக் கடை.

Tamil meaning
உன்னை விட்டுப் பிரியேன் அஞ்ச வேண்டாம் என்று உறுதியளித்தவர் பலரும் நாணும்படியாக என்னை விட்டுப் பிரிந்து சென்றிருக்கும் போது நான் மட்டும் ஊரார் தூற்றும் அலருக்காக நாண முடியுமா? 

English meaning
When the departure of him who said "fear not" has put me to shame before others, why need I be ashamed of scandal. 

குறள் 1150:.
தாம்வேண்டின் நல்குவர் காதலர் யாம்வேண்டும் 
கெளவை எடுக்கும்இவ் வூர்.

Tamil meaning
யாம் விரும்புகின்றவாறு ஊரார் அலர் தூற்றுகின்றனர்; காதலரும் விரும்பினால் அதை ஒப்புக் கொள்வார். 

English meaning

The rumour I desire is raised by the town (itself); and my lover would if desired consent (to my following him). 

No comments:

Post a Comment