குறள் 1201-1210 நினைந்தவர்புலம்பல்

குறள் 1201:.
உள்ளினும் தீராப் பெருமகிழ் செய்தலால் 
கள்ளினும் காமம் இனிது.

Tamil meaning
உண்டபோது மட்டும் மகிழ்ச்சி தரும் கள்ளைவிட நினைத்தாலே நெஞ்சினிக்கச் செய்யும் காதல் இன்பமானதாகும்.

English meaning
Sexuality is sweeter than liquor, because when remembered, it creates a most rapturous delight. 

குறள் 1202:.

எனைத்தொனறு ஏனிதேகாண் காமம்தாம் வீழ்வார் 
நினைப்ப வருவதொன்று ஏல்.

Tamil meaning
விரும்பி இணைந்த காதலரை நினைத்தலால், பிரிவின் போது வரக்கூடிய துன்பம் வருவதில்லை எனவே எந்த வகையிலும் காதல் இனிதேயாகும். 

English meaning
Even to think of one's beloved gives one no pain. Sexuality, in any degree, is always delightful. 

குறள் 1203:.

நினைப்பவர் போன்று நினையார்கொல் தும்மல் 
சினைப்பது போன்று கெடும்.

Tamil meaning
வருவது போலிருந்து வராமல் நின்று விடுகிறதே தும்மல்; அதுபோலவே என் காதலரும் என்னை நினைப்பது போலிருந்து, நினைக்காது விடுகின்றாரோ? 

English meaning
I feel as if I am going to sneeze but do not, and (therefore) my beloved is about to think (of me) but does not

குறள் 1204:.

யாமும் உளேங்கொல் அவர்நெஞ்சத்து எந்நெஞ்சத்து 
ஓஒ உளரே அவர்.

Tamil meaning
என் நெஞ்சைவிட்டு நீங்காமல் என் காதலர் இருப்பது போல, அவர் நெஞ்சை விட்டு நீங்காமல் நான் இருக்கின்றேனா?

English meaning
He continues to abide in my soul, do I likewise abide in his? 

குறள் 1205:.

தம்நெஞ்சத்து எம்மைக் கடிகொண்டார் நாணார்கொல் 
எம்நெஞ்சத்து ஓவா வரல்.

Tamil meaning
அவருடைய நெஞ்சில் எமக்கு இடம் தராமல் இருப்பவர்; எம் நெஞ்சில் மட்டும் இடைவிடாமல் வந்து புகுந்து கொள்வதற்காக வெட்கப்படமாட்டார் போலும். 

English meaning
He who has imprisoned me in his soul, is he ashamed to enter incessantly into mine. 

குறள் 1206:.

மற்றியான் என்னுளேன் மன்னோ அவரொடியான் 
உற்றநாள் உள்ள உளேன்.

Tamil meaning
நான் அவரோடு சேர்ந்திருந்த நாட்களை நினைத்துத் தான் உயிரோடு இருக்கிறேன்; வேறு எதை நினைத்து நான் உயிர்வாழ முடியும்? 

English meaning
I live by remembering my (former) intercourse with him; if it were not so, how could I live? 

குறள் 1207:.

மறப்பின் எவனாவன் மற்கொல் மறப்பறியேன் 
உள்ளினும் உள்ளம் சுடும்.

Tamil meaning
மறதி என்பதே இல்லாமல் நினைத்துக் கொண்டிருக்கும் பொழுதே பிரிவுத்துன்பம் சுட்டுப் பொசுக்குகிறதே! பிணைக்காமல் மறந்துவிட்டால் என்ன ஆகுமோ? 

English meaning
I have never forgotten (the pleasure); even to think of it burns my soul; could I live, if I should ever forget it?

குறள் 1208:.

எனைத்து நினைப்பினும் காயார் அனைத்தன்றோ 
காதலர் செய்யும் சிறப்பு.

Tamil meaning
எவ்வளவு அதிகமாக நினைத்தாலும், அதற்காகக் காதலர் என் மீது சினம் கொள்ளமாட்டார். அவர் எனக்குச் செய்யும் பெரும் உதவி அதுவல்லவா? 

English meaning
He will not be angry however much I may think of him; is it not so much the delight my beloved affords me? 

குறள் 1209:.

விளியுமென் இன்னுயிர் வேறல்லம் என்பார் 
அளியின்மை ஆற்ற நினைந்து.

Tamil meaning
நாம் ஒருவரே; வேறு வேறு அல்லர். எனக்கூறிய காதலர் இரக்கமில்லாதவராக என்னைப் பிரிந்து சென்றுள்ளதை நினைத்து வருந்துவதால் என்னுயிர் கொஞ்சம் கொஞ்சமாகப் போய்க் கொண்டிருக்கிறது. 

English meaning
My precious life is wasting away by thinking too much on the cruelty of him who said we were not different.

குறள் 1210:.

விடாஅது சென்றாரைக் கண்ணினால் காணப் 
படாஅதி வாழி மதி.

Tamil meaning
நிலவே! நீ வாழ்க; இணைபிரியாமலிருந்து, பிரிந்து சென்றுள்ள காதலரை நான் என் கண்களால் தேடிக் கண்டுபிடித்திடத் துணையாக நீ மறையாமல் இருப்பாயாக. 

English meaning
May you live, O Moon! Do not set, that I mine see him who has departed without quitting my soul.

No comments:

Post a Comment