குறள் 1211-1220 கனவுநிலையுரைத்தல்

குறள் 1211:.
காதலர் தூதொடு வந்த கனவினுக்கு 
யாதுசெய் வேன்கொல் விருந்து.

Tamil meaning
வந்த கனவு காதலர் அனுப்பிய தூதுடன் வந்ததே; அந்தக் கனவுக்குக் கைம்மாறாக என்ன விருந்து படைத்துப் பாராட்டுவது? 

English meaning
Where with shall I feast the dream which has brought me my dear one's messenger? 

குறள் 1212:.
கயலுண்கண் யானிரப்பத் துஞ்சிற் கலந்தார்க்கு 
உயலுண்மை சாற்றுவேன் மன்.

Tamil meaning
நான் வேண்டுவதற்கு இணங்கி என் மை எழுதிய கயல் விழிகள் உறங்கிடுமானால், அப்போது என் கனவில் வரும் காதலர்க்கு நான் இன்னமும் உயிரோடு இருப்பதைச் சொல்லுவேன். 

English meaning
If my fish-like painted eyes should, at my begging, close in sleep, I could fully relate my sufferings to my lord.

குறள் 1213:.
நனவினால் நல்கா தவரைக் கனவினால் 
காண்டலின் உண்டென் உயிர்.

Tamil meaning
நனவில் வந்து அன்பு காட்டாதவரைக் கனவிலாவது காண்பதால்தான் இன்னும் என்னுயிர் நிலைத்திருக்கிறது. 

English meaning
My life lasts because in my dream I behold him who does not favour me in my waking hours. 

குறள் 1214:.
கனவினான் உண்டாகும் காமம் நனவினான் 
நல்காரை நாடித் தரற்கு.

Tamil meaning
நேரில் என்னிடம் வந்து அன்பு காட்டாத காதலரைத் தேடிக் கொண்டு வந்து காட்டுகிற கனவால் எனக்குக் காதல் இன்பம் கிடைக்கிறது.

English meaning
There is pleasure in my dream, because in it I seek and obtain him who does not visit me in my wakefulness. 

குறள் 1215:.
நனவினால் கண்டதூஉம் ஆங்கே கனவுந்தான் 
கண்ட பொழுதே இனிது.

Tamil meaning
காதலரை நேரில் கண்ட இன்பம் அப்போது இனிமை வழங்கியது போலவே, இப்போது அவரைக் கனவில் காணும் இன்பமும் இனிமை வழங்குகிறது! 

English meaning
I saw him in my waking hours, and then it was pleasant; I see him just now in my dream, and it is (equally) pleasant. 

குறள் 1216:.
நனவென ஒன்றில்லை ஆயின் கனவினால் 
காதலர் நீங்கலர் மன்.

Tamil meaning
நனவு மட்டும் திடிரென வந்து கெடுக்காமல் இருந்தால், கனவில் சந்தித்த காதலர் பிரியாமலே இருக்க முடியுமே. 

English meaning
Were there no such thing as wakefulness, my beloved (who visited me) in my dream would not depart from me

குறள் 1217:.
நனவினால் நல்காக் கொடியார் கனவனால் 
என்எம்மைப் பீழிப் பது.

Tamil meaning
நேரில் வந்து அன்பு காட்டாத கொடிய நெஞ்சமுடையவர், கனவில் வந்து பிரிவுத் துயரைப் பெரிதாக்குவது என்ன காரணத்தால்? 

English meaning
The cruel one who would not favour me in my wakefulness, what right has he to torture me in my dreams? 

குறள் 1218:.
துஞ்சுங்கால் தோள்மேலர் ஆகி விழிக்குங்கால் 
நெஞ்சத்தர் ஆவர் விரைந்து.

Tamil meaning
தூக்கத்தில் கனவில் வந்து என் தோள் மீது சாய்ந்து இன்பம் தந்தவர், விழித்தபோது எங்கும் போய் விடவில்லை; என் நெஞ்சில் தாவி அமர்ந்து கொண்டார்.

English meaning
When I am asleep he rests on my shoulders, (but) when I awake he hastens into my soul. 

குறள் 1219:.
நனவினால் நல்காரை நோவர் கனவினால் 
காதலர்க் காணா தவர்.

Tamil meaning
கனவில் காதலரைக் காணாதவர்கள்தான் அவர் நேரில் வந்து காணவில்லையே என்று நொந்து கொள்வர். 

English meaning
They who have no dear ones to behold in their dreams blame him who visits me not in my waking hours. 

குறள் 1220:.
நனவினால் நம்நீத்தார் என்பர் கனவினால் 
காணார்கொல் இவ்வூ ரவர்.

Tamil meaning
என் காதலர் என்னைப் பிரிந்திருப்பதாக அவரைக் குற்றம் சாட்டுகிறார்களே, இந்த ஊரார், பிரிந்து சென்ற தமது காதலனைக் கனவில் காண்பது கிடையாதோ? 

English meaning
The women of this place say he has forsaken me in my wakefulness. I think they have not seen him visit me in my dreams.

No comments:

Post a Comment