குறள் 1221-1230 பொழுதுகண்டிரங்கல்

குறள் 1221:.
மாலையோ அல்லை மணந்தார் உயிருண்ணும் 
வேலைநீ வாழி பொழுது.

Tamil meaning
நீ மாலைப் பொழுதாக இல்லாமல் காதலரைப் பிரிந்திருக்கும் மகளிர் உயிரைக் குடிக்கும் வேலாக இருப்பதற்காக உனக்கோர் வாழ்த்து! 

English meaning
Live, O you evening are you (the former) evening? No, you are the season that slays (married) women. 

குறள் 1222:.
புன்கண்ணை வாழி மருள்மாலை எம்கேள்போல் 
வன்கண்ண தோநின் துணை.

Tamil meaning
மயங்கும் மாலைப் பொழுதே! நீயும் எம்மைப் போல் துன்பப்படுகின்றாயே! எம் காதலர் போல் உன் துணையும் இரக்கம் அற்றதோ? 

English meaning
A long life to you, O dark evening! You are sightless. Is your help-mate (also) as hard-hearted as mine. 

குறள் 1223:.
பனிஅரும்பிப் பைதல்கொள் மாலை துனிஅரும்பித் 
துன்பம் வளர வரும்.

Tamil meaning
பக்கத்தில் என் காதலர் இருந்த போது பயந்து, பசலை நிறத்துடன் வந்த மாலைப் பொழுது, இப்போது என் உயிரை வெறுக்குமளவுக்குத் துன்பத்தை மிகுதியாகக் கொண்டு வருகிறது. 

English meaning
The evening that (once) came in with trembling and dimness (now) brings me an aversion for life and increasing sorrow.

குறள் 1224:.
காதலர் இல்வழி மாலை கொலைக்களத்து 
ஏதிலர் போல வரும்.

Tamil meaning
காதலர் பிரிந்திருக்கும்போது வருகிற மாலைப் பொழுது கொலைக் களத்தில் பகைவர் ஓங்கி வீசுகிற வாளைப்போல் வருகிறது. 

English meaning
In the absence of my lover, evening comes in like slayers on the field of slaughter. 

குறள் 1225:.
காலைக்குச் செய்தநன்று என்கொல் எவன்கொல்யான் 
மாலைக்குச் செய்த பகை?

Tamil meaning
மாலைப் பொழுதாகிவிட்டால் காதல் துன்பம் அதிகமாக வருத்துகிறது. அதனால் பிரிந்திருக்கும் காதலர் உள்ளம் காலை நேரத்துக்கு நான் செய்த நன்மை என்ன? மாலை நேரத்துக்குச் செய்த தீமைதான் என்ன? என்று புலம்புகிறது. 

English meaning
What good have I done to morning (and) what evil to evening? 

குறள் 1226:.
மாலைநோய் செய்தல் மணந்தார் அகலாத 
காலை அறிந்த திலேன்.

Tamil meaning
மாலைக்காலம் இப்படியெல்லாம் இன்னல் விளைவிக்கக் கூடியது என்பதைக் காதலர் என்னை விட்டுப் பிரியாமல் இருந்த போது நான் அறிந்திருக்கவில்லை.

English meaning
Previous to my husband's departure, I know not the painful nature of evening. 

குறள் 1227:.
காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி 
மாலை மலரும்இந் நோய்.

Tamil meaning
காதல் என்பது காலையில் அரும்பாகி, பகல் முழுதும் முதிர்ச்சியடைந்து, மாலையில் மலரும் ஒரு நோயாகும். 

English meaning
This malady buds forth in the morning, expands all day long and blossoms in the evening. 

குறள் 1228:.
அழல்போலும் மாலைக்குத் தூதாகி ஆயன் 
குழல்போலும் கொல்லும் படை.

Tamil meaning
காதலர் பிரிவால் என்னைத் தணலாகச் சுடுகின்ற மாலைப்பொழுதை அறிவிக்கும் தூதாக வருவது போல வரும் ஆயனின் புல்லாங்குழலோசை என்னைக் கொல்லும் படைக்கருவியின் ஓசைபோல் அல்லவா காதில் ஒலிக்கிறது.

English meaning
The shepherd's flute now sounds as a fiery forerunner of night, and is become a weapon that slays (me)

குறள் 1229:.
பதிமருண்டு பைதல் உழக்கும் மதிமருண்டு 
மாலை படர்தரும் போழ்து.

Tamil meaning
என் அறிவை மயக்கும் மாலைப் பொழுது, இந்த ஊரையே மயக்கித் துன்பத்தில் ஆழ்த்துவது போல் எனக்குத் தோன்றுகிறது. 

English meaning
When night comes on confusing (everyone's) mind, the (whole) town will lose its sense and be plunged in sorrow. 

குறள் 1230:.
பொருள்மாலை யாளரை உள்ளி மருள்மாலை 
மாயும்என் மாயா உயிர்.

Tamil meaning
பொருள் ஈட்டுவதற்கச் சென்றுள்ள காதலரை எண்ணி மாய்ந்து போகாத என்னுயிர், மயக்கும் இந்த மாலைப் பொழுதில் மாய்ந்து போகின்றது. 

English meaning
My (hitherto) unextinguished life is now lost in this bewildering night at the thought of him who has the nature of wealth.

No comments:

Post a Comment