குறள் 1241-1250 நெஞ்சொடுகிளத்தல்

குறள் 1241:.
நினைத்தொன்று சொல்லாயோ நெஞ்சே எனைத்தொன்றும் 
எவ்வநோய் தீர்க்கும் மருந்து.

Tamil meaning
எந்த மருந்தினாலும் தீராத என் காதல் நோய் தீர்ந்திட ஏதாவது ஒரு மருந்தை நினைத்துப் பார்த்து, நெஞ்சே! உன்னால் சொல்ல முடியுமா? 

English meaning
O my soul, will you not think and tell me some medicine be it what it may, that can cure this incurable malady?

குறள் 1242:.
காதல் அவரிலர் ஆகநீ நோவது 
பேதைமை வாழியென் நெஞ்சு.

Tamil meaning
வர் நமது காதலை மதித்து நம்மிடம் வராத போது, நெஞ்சே! நீ மட்டும் அவரை நினைத்து வருந்துவது அறியாமையாகும்; நீ வாழ்க. 

English meaning
May you live, O my soul! While he is without love, for you to suffer is (simple) folly.

குறள் 1243:.
இருந்துள்ளி என்பரிதல் நெஞ்சே பரிந்துள்ளல் 
பைதல்நோய்  செய்தார்கண்  இல்.

Tamil meaning
பிரிவுத் துன்பம் தந்த காதலருக்கு நம்மிடம் இரக்கமில்லாத போது, நெஞ்சே! நீ மட்டும் இங்கிருந்து கொண்டு அவரை எண்ணிக் கலங்குவதால் என்ன பயன்? 

English meaning
O my soul! why remain (here) and suffer thinking (of him)? There are no lewd thoughts (of you) in him who has caused you this disease of sorrow. 

குறள் 1244:.
கண்ணும் கொளச்சேறி நெஞ்சே இவையென்னைத் 
தின்னும் அவர்க்காணல் உற்று.

Tamil meaning
நெஞ்சே! நீ காதலரிடம் செல்லும் போது கண்களையும்கூட அழைத்துக்கொண்டு போ; இல்லையேல் அவரைக் காண வேண்டுமென்று என்னையே அவை தின்று விடுவது போல் இருக்கின்றன. 

English meaning
O my soul! take my eyes also with you, (if not), these would eat me up (in their desire) to see him.

குறள் 1245:.
செற்றார் எனக்கை விடல்உண்டோ நெஞ்சேயாம் 
உற்றால் உறாஅ  தவர்.

Tamil meaning
நெஞ்சே! நாம் விரும்பினாலும் நம்மை விரும்பி வராத அவர், நம்மை வெறுத்து விட்டார் என நினைத்து அவர் மீது கொண்ட காதலைக் கைவிட்டு விட முடியுமா? 

English meaning
O my soul! can he who loves not though he is beloved, be forsaken saying he hates me (now)? 

குறள் 1246:.
கலந்துணர்த்தும் காதலர்க் கண்டாற் புலந்துணராய் 
பொய்க்காய்வு காய்திஎன்  நெஞ்சு.

Tamil meaning
நெஞ்சே! கூடிக் கலந்து ஊடலை நீக்கும் காதலரைக் கண்டால் ஒரு தடவைகூடப் பிணங்கியறியாத நீ இப்போது அவர் மீது கொள்ளுகிற கோபம் பொய்யானது தானே?

English meaning
O my soul! when you see the dear one who remove dislike by intercourse, you are displeased and continue to be so. Nay, your displeasure is (simply) false.

குறள் 1247:.
காமம் விடுஒன்றோ  நாண்விடு நன்னெஞ்சே 
யானோ பொறேன்இவ் விரண்டு.

Tamil meaning
நல்ல நெஞ்சமே! ஒன்று காதலால் துடிப்பதையாவது விட்டு விடு; அல்லது அதனைத் துணிந்து சொல்ல முடியாமல் தடுக்கும் நாணத்தையாவது விட்டு விடு. இந்த இரண்டு செய்லகளையும் ஒரே நேரத்தில் தாங்கிக் கொள்ள என்னால் முடியாது.

English meaning
O my good soul, give up either lust or honour, as for me I can endure neither.

குறள் 1248:.
பரிந்தவர் நல்காரென்று ஏங்கிப் பிரிந்தவர் 
பின்செல்வாய் பேதைஎன் நெஞ்சு.

Tamil meaning
நம்மீது இரக்கமின்றிப் பிரிந்து விட்டாரேயென்று ஏங்கிடும் அதே வேளையில் பிரிந்தவர் பின்னாலேயே சென்று கொண்டிருக்கும் என் நெஞ்சம் ஓர் அறிவற்ற பேதை போன்றதாகும்.

English meaning
You are a fool, O my soul! to go after my departed one, while you mourn that he is not kind enough to favour you.

குறள் 1249:.
உள்ளத்தார்  காத லவரால் உள்ளிநீ 
யாருழைச் சேறியென் நெஞ்சு.

Tamil meaning
உள்ளத்திலேயே காதலர் குடி கொண்டிருக்கும்போது, நெஞ்சமே! நீ அவரை நினைத்து வெளியே எவரிடம் தேடி அலைகிறாய்? 

English meaning
O my soul! to whom would you repair, while the dear one is within yourself? 

குறள் 1250:.
துன்னாத் துறந்தாரை நெஞ்சத்து உடையேமா 
இன்னும் இழத்தும் கவின்.

Tamil meaning
சேராமல் பிரிந்து சென்ற காதலரைச் சிந்தையில் வைத்திருப்பதால் மேலும் மேனியெழில் இழந்து மெலிந்து அழிய வேண்டியுள்ளது.

English meaning
If I retain in my heart him who has left me without befriending me, I shall lose even the (inward) beauty that remains.

No comments:

Post a Comment