குறள் 1251-1260 நிறையழிதல்

குறள் 1251:.
காமக் கணிச்சி உடைக்கும் நிறையென்னும் 
நாணுத்தாழ் வீழ்த்த கதவு.

Tamil meaning
காதல் வேட்கை இருக்கிறதே, அது ஒரு கோடரியாக மாறி, நாணம் எனும் தாழ்ப்பாள் போடப்பட்ட மன அடக்கம் என்கிற கதவையே உடைத்தெறிந்து விடுகின்றது.

English meaning
My precious life is saved by the raise of rumour, and this, to my good luck no others are aware of.

குறள் 1252:.
காமம் எனவொன்றோ கண்ணின்றென் நெஞ்சத்தை 
யாமத்தும் ஆளும் தொழில்.

Tamil meaning
காதல் வேட்கை எனப்படும் ஒன்று இரக்கமே இல்லாதது; ஏனெனில் அது என் நெஞ்சில் நள்ளிரவிலும் ஆதிக்கம் செலுத்தி அலைக்கழிக்கிறது. 

English meaning
Even at midnight is my mind worried by lust, and this one thing, alas! is without mercy. 

குறள் 1253:.
மறைப்பேன்மன் காமத்தை யானோ குறிப்பின்றித் 
தும்மல்போல் தோன்றி விடும்.

Tamil meaning
எவ்வளவுதான் அடக்க முயன்றாலும் கட்டுப்படாமல் தும்மல் நம்மையும் மீறி வெளிப்படுகிறதல்லவா; அதைப் போன்றதுதான் காதல் உணர்ச்சியும்; என்னதான் மறைத்தாலும் காட்டிக் கொடுத்துவிடும்.

English meaning
I would conceal my lust, but alas, it yields not to my will but breaks out like a sneeze. 

குறள் 1254:.
நிறையுடையேன் என்பேன்மன் யானோஎன் காமம் 
மறையிறந்து மன்று படும்.

Tamil meaning
மன உறுதிகொண்டவள் நான் என்பதே என் நம்பிக்கை; ஆனால் என் காதல், நான் மறைப்பதையும் மீறிக்கொண்டு மன்றத்திலேயே வெளிப்பட்டு விடுகிறதே. 

English meaning
I say I would be firm, but alas, my malady breaks out from its concealment and appears in public. 

குறள் 1255:.
செற்றார்பின் செல்லாப் பெருந்தகைமை காமநோய் 
உற்றார் அறிவதொன்று அன்று.

Tamil meaning
தம்மைப் பிரிந்து சென்ற காதலரைப் பகையாகக் கருதி அவரைத் தொடர்ந்து மன அடக்கம், காதல் நோயுற்றவர்க்கு இருப்பதில்லை. 

English meaning
The dignity that would not go after an absent lover is not known to those who are sticken by love. 

குறள் 1256:.
செற்றவர் பின்சேறல் வேண்டி அளித்தரோ 
எற்றென்னை உற்ற துயர்.

Tamil meaning
வெறுத்துப் பிரிந்ததையும் பொறுத்துக் கொண்டு அவர் பின்னே செல்லும் நிலையை என் நெஞ்சுக்கு ஏற்படுத்திய காதல் நோயின் தன்மைதான் என்னே.

English meaning
The sorrow I have endured by desiring to go after my absent lover, in what way is it excellent?

குறள் 1257:.
நாணென ஒன்றோ அறியலம் காமத்தால் 
பேணியார் பெட்ப செயின்.

Tamil meaning
நமது அன்புக்குரியவர் நம்மீது கொண்ட காதலால் நமக்கு விருப்பமானவற்றைச் செய்யும்போது, நாணம் எனும் ஒரு பண்பு இருப்பதையே நாம் அறிவதில்லை. 

English meaning
I know nothing like shame when my beloved does from love (just) what is desired (by me). 

குறள் 1258:.
பன்மாயக் கள்வன் பணிமொழி அன்றோநம் 
பெண்மை உடைக்கும் படை.

Tamil meaning
நம்முடைய பெண்மை எனும் உறுதியை உடைக்கும் படைக்கலனாக இருப்பது, பல மாயங்களில் வல்ல கள்வராம் காதலரின் பணிவான பாகுமொழியன்றோ?

English meaning
Are not the enticing words of my trick-abounding roguish lover the weapon that breaks away my feminine firmness? 

குறள் 1259:.
புலப்பல் எனச்சென்றேன் புல்லினேன் நெஞ்சம் 
கலத்தல் உறுவது கண்டு.

Tamil meaning
ஊடல் கொண்டு பிணங்குவோம் என நினைத்துதான் சென்றேன்; ஆனால் என் நெஞ்சம் என்னை விடுத்து அவருடன் கூடுவதைக் கண்டு என் பிடிவாதத்தை மறந்து தழுவிக் கொண்டேன்.

English meaning
I said I would feign dislike and so went (away); (but) I embraced him the moment I say my mind began to unite with him! 

குறள் 1260:.
நிணந்தீயில் இட்டன்ன நெஞ்சினார்க்கு உண்டோ 
புணரந்தூடி நிற்பேம் எனல்.

Tamil meaning
நெருப்பிலிட்ட கொழுப்பைப் போல் உருகிடும் நெஞ்சம் உடையவர்கள், கூடிக் களித்தபின் ஊடல் கொண்டு அதில் உறுதியாக இருக்க முடியுமா? 

English meaning
Is it possible for those whose hearts melt like fat in the fire to say they can feign a strong dislike and remain so? 

No comments:

Post a Comment