குறள் 1261-1270 அவர்வயின்விதும்பல்

குறள் 1261:.
வாளற்றுப் புற்கென்ற கண்ணும் அவர்சென்ற 
நாளொற்றித் தேய்ந்த விரல்.

Tamil meaning
வருவார் வருவார் என வழி பார்த்துப் பார்த்து விழிகளும் ஒளியிழந்தன; பிரிந்து சென்றுள்ள நாட்களைச் சுவரில் குறியிட்டு அவற்றைத் தொட்டுத் தொட்டு எண்ணிப் பார்த்து விரல்களும் தேய்ந்தன. 

English meaning
My finger has worn away by marking (on the wall) the days he has been absent while my eyes have lost their lustre and begin to fail. 

குறள் 1262:.
இலங்கிழாய் இன்று மறப்பின்என் தோள்மேல் 
கலங்கழியும் காரிகை நீத்து.

Tamil meaning
காதலரைப் பிரிந்திருக்கும் நான், பிரிவுத் துன்பம் வாராதிருக்க அவரை மறந்திருக்க முனைந்தால், என் தோள்கள் அழகு நீங்கி மெலிந்து போய் வளையல்களும் கழன்று விழுவது உறுதியடி என் தோழி. 

English meaning
O you bright-jewelled maid, if I forget (him) today, my shoulders will lose their beauty even in the other life and make my bracelets loose.

குறள் 1263:.
உரன்நசைஇ உள்ளம் துணையாகச் சென்றார் 
வரல்நசைஇ இன்னும் உளேன்.

Tamil meaning
ஊக்கத்தையே உறுதுணையாகக் கொண்டு வெற்றியை விரும்பிச் சென்றுள்ள காதலன், திரும்பி வருவான் என்பதற்காகவே நான் உயிரோடு இருக்கிறேன். 

English meaning
I still live by longing for the arrival of him who has gone out of love for victory and with valour as his guide

குறள் 1264:.
கூடிய காமம் பிரிந்தார் வரவுள்ளிக் 
கோடுகொ  டேறுமென் நெஞ்சு.

Tamil meaning
காதல் வயப்பட்டுக் கூடியிருந்து பிரிந்து சென்றவர் எப்போது வருவார் என்று என் நெஞ்சம், மரத்தின் உச்சிக் கொம்பில் ஏறிப் பார்க்கின்றது. 

English meaning
My heart is rid of its sorrow and swells with rapture to think of my absent lover returning with his love

குறள் 1265:.
காண்கமன் கொண்கனைக் கண்ணாரக் கண்டபின் 
நீங்கும்என் மென்தோள் பசப்பு.

Tamil meaning
கண்ணார என் கணவனைக் காண்பேனாக; கண்டபிறகே என் மெல்லிய தோளில் படர்ந்துள்ள பசலை நிறம் நீங்கும். 

English meaning
May I look on my lover till I am satisfied and thereafter will vanish the sallowness of my slender shoulders. 

குறள் 1266:.
வருகமன் கொண்கன் ஒருநாள் பருகுவன் 
பைதல்நோய் எல்லாம் கெட.

Tamil meaning
என்னை வாடவிட்டுப் பிரிந்துள்ள காதலன், ஒருநாள் வந்துதான் ஆகவேண்டும். வந்தால் என் துன்பம் முழுவதும் தீர்ந்திட அவனிடம் இன்பம் துய்ப்பேன். 

English meaning
May my husband return some day; and then will I enjoy (him) so as to destroy all this agonizing sorrow. 

குறள் 1267:.
புலப்பேன்கொல் புல்லுவேன் கொல்லோ கலப்பேன்கொல் 
கண்அன்ன  கேளிர்  விரன்.

Tamil meaning
கண்ணின் மணியாம் என் காதலர் வந்தவுடன், பிரிந்திருந்த துயரின் காரணமாக அவருடன் ஊடல், கொள்வேனோ? அல்லது கட்டித் தழுவிக் கொள்வேனோ? அல்லது ஊடுதல் கூடுதல் ஆகிய இரண்டையும் இணைத்துச் செய்வேனோ? ஒன்றுமே புரியவில்லையே எனக்கு; அந்த இன்பத்தை நினைக்கும்போது.

English meaning
On the return of him who is as dear as my eyes, am I displeased or am I to embrace (him); or am I to do both? 

குறள் 1268:.
வினைகலந்து வென்றீக வேந்தன் மனைகலந்து 
மாலை அயர்கம் விருந்து.

Tamil meaning
தலைவன், தான் மேற்கொண்டுள்ள செயலில் வெற்றி பெறுவானாக; அவன் வெண்றால் என் மனைவியுடன் எனக்கு மாலைப்பொழுதில் இன்ப விருந்துதான் .

English meaning
Let the king fight and gain (victories); (but) let me be united to my wife and feast the evening. 

குறள் 1269:.
ஒருநாள் எழுநாள்போல் செல்லும்சேண் சென்றார் 
வருநாள்வைத்து ஏங்கு பவர்க்கு.

Tamil meaning
நெடுந்தொலைவு சென்ற காதலர் திரும்பி வரும் நாளை எதிர்பார்த்து ஏங்குபவர்க்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு யுகமாகத் தோன்றும்,

English meaning
To those who suffer waiting for the day of return of their distant lovers one day is as long as seven days. 

குறள் 1270:.
பெறின்என்னாம் பெற்றக்கால் என்னாம் உறினென்னாம் 
உள்ளம் உடைந்துக்கக் கால்.

Tamil meaning
துன்பத்தைத் தாங்கிக் கொள்ள முடியாமல் மனம் நிலையிழந்து போயிவிடுமானால், பிறகு ஒருவரையொருவர் திரும்பச் சந்திப்பதனாலோ, சந்தித்துக் கூடுவதினாலோ, என்ன பயன்? 

English meaning
After (my wife) has died of a broken heart, what good will there be if she is to receive me, has received me, or has even embraced me?

No comments:

Post a Comment