குறள் 1271-1280 குறிப்பறிவுறுத்தல்

குறள் 1271:.
கரப்பினுங் கையிகந் தொல்லாநின் உண்கண் 
உரைக்கல் உறுவதொன் றுண்டு.

Tamil meaning
வெளியில் சொல்லாமல் மறைக்கப் பார்த்தாலும், நிற்காமல் தடைகடந்து விழிகள் சொல்லக்கூடிய செய்தி ஒன்று உண்டு; அதுதான் பிரிவை விரும்பாத காதல். 

English meaning
Though you would conceal (your feelings), your painted eyes would not, for, transgressing (their bounds), they tell (me) something. 

குறள் 1272:.
கண்ணிறைந்த காரிகைக் காம்பேர்தோட் பேதைக்குப் 
பெண்நிறைந்த நீர்மை பெரிது.

Tamil meaning
கண்நிறைந்த அழகும் மூங்கில் போன்ற தோளும் கொண்ட என் காதலிக்குப் பெண்மைப் பண்பு நிறைந்திருப்பதே பேரழகாகும். 

English meaning
Unusually great is the female simplicity of your maid whose beauty fills my eyes and whose shoulders resemble the bamboo. 

குறள் 1273:.
மணியில் திகழ்தரு நூல்போல் மடந்தை 
அணியில் திகழ்வதொன்று உண்டு.

Tamil meaning
மணியாரத்திற்குள் மறைந்திருக்கும் நூலைப்போல இந்த மடந்தையின் அழகுக்குள்ளே என்னை மயக்கும் குறிப்பு ஒன்று உளது. 

English meaning
There is something that is implied in the beauty of this woman, like the thread that is visible in a garland of gems. 

குறள் 1274:.
முகைமொக்குள் உள்ளது நாற்றம்போல் பேதை 
நகைமொக்குள் உள்ளதொன் றுண்டு.

Tamil meaning
மலராத அரும்புக்குள் நறுமணம் அடங்கியிருப்பது போலத்தான் ஒரு பெண்ணின் புன்னகையென்ற அரும்புக்குள் அவளது காதலனைப்பற்றிய நினைவும் நிரம்பியிருக்கிறது.

English meaning
There is something in the unmatured smile of this maid like the fragrance that is contained in an unblossomed bud. 

குறள் 1275:.
செறிதொடி செய்திறந்த கள்ளம் உறுதுயர் 
தீர்க்கும் மருந்தொன்று உடைத்து.

Tamil meaning
வண்ணமிகு வளையல்கள் அணிந்த என் வடிவழகியின் குறும்புத்தனமான பார்வையில், என்னைத் துளைத்தெடுக்கும் துன்பத்தைத் தீர்க்கும் மருந்தும் இருக்கிறது. 

English meaning
The well-meant departure of her whose bangles are tight-fitting contains a remedy that can cure my great sorrow. 

குறள் 1276:.
பெரிதாற்றிப் பெட்பக் கலத்தல் அரிதாற்றி 
அன்பின்மை சூழ்வ துடைத்து.

Tamil meaning
ஆரத் தழுவி அளவற்ற அன்பு காட்டி அவர் என்னைக் கூடுவதானது மீண்டும் அவர் என்னைப் பிரிந்து செல்லப் போகிற குறிப்பை உணர்த்துவது போல் இருக்கிறதே.

English meaning
The embrace that fills me with comfort and gladness is capable of enduring (my former) sorrow and meditating on his want of love. 

குறள் 1277:.
தண்ணந் துறைவன் தணந்தமை நம்மினும் 
முன்னம் உணர்ந்த வளை.

Tamil meaning
குளிர்ந்த நீர்த் துறைக்கு உரிய காதலன் உடலால் கூடியிருக்கும் போது, உள்ளத்தால் பிரியும் நினைவு கொண்டதை என் வளையல்கள் எனக்கு முன்னரே உணர்ந்து கழன்றன போலும்! 

English meaning
My bracelets have understood before me the (mental) separation of him who rules the cool seashore. 

குறள் 1278:.
நெருநற்றுச் சென்றார்எம் காதலர் யாமும் 
எழுநாளேம் மேனி பசந்து.

Tamil meaning
நேற்றுத்தான் எம் காதலர் பிரிந்து சென்றார்; எனினும், பல நாட்கள் கழிந்தன என்பது போல் பசலை நிறம் எம்மைப் பற்றிக் கொண்டதே. 

English meaning
It was but yesterday my lover departed (from me); and it is seven days since my complexion turned sallow.

குறள் 1279:.
தொடிநோக்கி மென்தோளும் நோக்கி அடிநோக்கி 
அஃதாண் டவள்செய் தது.

Tamil meaning
பிரிவு காரணமாகக் கழலக் கூடிய வளையலையும், மெலிந்து போகக் கூடிய மென்மையான தோளையும் நோக்கியவன் காதலனைத் தொடர்ந்து செல்வதென்ற முடிவைத் தன் அடிகளை நோக்கும் குறிப்பால் உணர்த்தினான். 

English meaning
She looked at her bracelets, her tender shoulders, and her feet; this was what she did there (significantly). 

குறள் 1280:.
பெண்ணினால் பெண்மை உடைத்தென்ப கண்ணினால் 
காமநோய் சொல்லி இரவு.

Tamil meaning
காதல் வேட்கையைக் கண்களால் உணர்த்திக் காதலனுடன் போவதற்கு இரந்து நிற்கும்போது பெண்மைக்குப் பெண்மை சேர்த்தாற் போன்று இருக்கின்றது.

English meaning
To express their love-sickness by their eyes and resort to begging bespeaks more than ordinary female excellence. 

No comments:

Post a Comment