குறள் 1291-1300 நெஞ்சொடுபுலத்தல்

குறள் 1291:.
அவர்நெஞ்சு அவர்க்காதல் கண்டும் எவன்நெஞ்சே 
நீஎமக்கு ஆகா தது.

Tamil meaning
நெஞ்சே! நம்மை நினைக்காமல் இருப்பதற்கு அவருடைய நெஞ்சு அவருக்குத் துணையாக இருக்கும்போது நீ எமக்குத் துணையாக இல்லாமல் அவரை நினைத்து உருகுவது ஏன்? 

English meaning
O my soul! although you have seen how his soul stands by him, how is it you do not stand by me? 

குறள் 1292:.
உறாஅ தவர்க்கண்ட கண்ணும் அவரைச் 
செறாஅரெனச் சேறியென் நெஞ்சு.

Tamil meaning
நெஞ்சே! நம்மிடம் அன்பு காட்டாதவர் அவர் எனக் கண்ட பிறகும், நம்மை வெறுக்க மாட்டார் என நம்பி அவரிடம் செல்கின்றாயே. 

English meaning
O my soul! although you have known him who does not love me, still do you go to him, saying  he will not be displeased.

குறள் 1293:.
கெட்டார்க்கு நட்டார்இல் என்பதோ நெஞ்சேநீ 
பெட்டாங்கு அவர்பின் செலல்.

Tamil meaning
நெஞ்சே! நீ எனை விடுத்து அவரை விரும்பிப் பின் தொடர்ந்து செல்வது, துன்பத்தால் அழிந்தோர்க்கு நண்பர்கள் துணையிருக்க மாட்டார்கள் என்று சொல்வது போலவோ? 

English meaning
O my soul! do you follow him at pleasure under the belief that the ruined have no friends? 

குறள் 1294:.
இனிஅன்ன நின்னொடு சூழ்வார்யார் நெஞ்சே 
துனிசெய்து துவ்வாய்காண் மற்று.

Tamil meaning
நெஞ்சே! முதலில் ஊடல் செய்து பிறகு அதன் பயனைக் கூடலில் நுகர்வோம் என நினைக்க மாட்டாய்; எனவே அதைப்பற்றி உன்னிடம் யார் பேசப் போகிறார்கள்? நான் பேசுவதாக இல்லை.

English meaning
O my soul! you would not first seem sulky and then enjoy (him); who then would in future consult you about such things? 

குறள் 1295:.
பெறாஅமை அஞ்சும் பெறின்பிரிவு அஞ்சும் 
அறாஅ  இடும்பைத்தென் நெஞ்சு.

Tamil meaning
என் நெஞ்சத்துக்குத் துன்பம் தொடர் கதையாகவே இருக்கிறது. காதலரைக் காணவில்லையே என்று அஞ்சும்; அவர் வந்து விட்டாலோ பிரிந்து செல்வாரே என நினைத்து அஞ்சும். 

English meaning
My soul fears when it is without him; it also fears when it is with him; it is subject to incessant sorrow. 

குறள் 1296:.
தனியே இருந்து நினைத்தக்கால் என்னைத் 
தினிய இருந்ததென் நெஞ்சு.

Tamil meaning
காதலர் பிரிவைத் தனியே இருந்து நினைத்தபோது என் நெஞ்சம் என்னைத் தின்பது போலக் கொடுமையாக இருந்தது.

English meaning
My mind has been (here) in order to eat me up (as it were) whenever I think of him in my solitude. 

குறள் 1297:.
நாணும் மறந்தேன் அவர்மறக் கல்லாஎன் 
மாணா மடநெஞ்சிற் பட்டு.

Tamil meaning
அவரை மறக்க முடியாமல் வாடும் என்னுடைய சிறப்பில்லாத மட நெஞ்சத்துடன் சேர்ந்து மறக்கக் கூடாது நாணத்தையும் மறந்து விட்டேன். 

English meaning
I have even forgotten my modesty, having been caught in my foolish mind which is not dignified enough to forget him. 

குறள் 1298:.
எள்ளின் இளிவாம்என்று எண்ணி அவர்திறம் 
உள்ளும் உயிர்க்காதல் நெஞ்சு.

Tamil meaning
பிரிந்து சென்ற காதலரை இகழ்வது தனக்கே இழிவாகும் என்பதால், அவருடைய பெருமையைப் பற்றியே என்னுயிர்க் காதல் நெஞ்சம் எண்ணிக் கொண்டிருக்கும். 

English meaning
My soul which clings to life thinks only of his (own) gain in the belief that it would be disgraceful for it to despise him

குறள் 1299:.
துன்பத்திற்கு யாரே துணையாவார் தாமுடைய 
நெஞ்சந் துணையல் வழி.

Tamil meaning
துன்பம் வரும்போது அதனைத் தாங்குவதற்கு நெஞ்சமே துணையாக இல்லாவிட்டால் பிறகு யார் துணையாக இருப்பார்? 

English meaning
Who would help me out of one's distress, when one's own soul refuses help to one?

குறள் 1300:.
தஞ்சம் தமரல்லர் ஏதிலார் தாமுடைய 
நெஞ்சம் தமரல் வழி.

Tamil meaning
நமக்குரிய நெஞ்சமே நம்முடன் உறவாக இல்லாத போது, மற்றவர் உறவில்லாதவராக இருத்தல் என்பது எளிதேயாகும். 

English meaning
It is hardly possible for strangers to behave like relations, when one's own soul acts like a stranger. 

No comments:

Post a Comment