குறள் 1301-1310 புலவி

குறள் 1301:.
புல்லா திராஅப் புலத்தை அவர்உறும் 
அல்லல்நோய் காண்கம் சிறிது.

Tamil meaning
ஊடல் கொள்வதால் அவர் துன்ப நோயினால் துடிப்பதைச் சிறிது நேரம் காண்பதற்கு அவரைத் தழுவிடத் தயங்கிப் பிணங்குவாயாக.

English meaning
 Let us witness awhile his keen suffering; just feign dislike and embrace him not. 

குறள் 1302:.
உப்பமைந் தற்றால் புலவி அதுசிறிது 
மிக்கற்றால் நீள விடல்.

Tamil meaning
ஊடலுக்கும் கூடலுக்கும் இடையில் உள்ள காலம் உணவில் இடும் உப்பு போல் ஓரளவுடன் இருக்க வேண்டும். அந்தக் கால அளவு நீடித்தால் உணவில் உப்பு மிகுதியானதற்கு ஒப்பாக ஆகிவிடும். 

English meaning
A little dislike is like salt in proportion; to prolong it a little is like salt a little too much. 

குறள் 1303:.
அலந்தாரை அல்லல்நோய் செய்தற்றால் தம்மைப் 
புலந்தாரைப் புல்லா விடல்.

Tamil meaning
ஊடல் கொண்டவரின் ஊடல் நீக்கித் தழுவாமல் விடுதல் என்பது, ஏற்கனவே துன்பத்தால் வருந்துவோரை மேலும் துன்பநோய்க்கு ஆளாக்கி வருத்துவதாகும்.

English meaning
For men not to embrace those who have feigned dislike is like torturing those already in agony. 

குறள் 1304:.
ஊடி யவரை உணராமை வாடிய 
வள்ளி முதலரிந் தற்று.

Tamil meaning
ஊடல் புரிந்து பிணங்கியிருப்பவரிடம் அன்பு செலுத்திடாமல் விலகியே இருப்பின், அது ஏற்கனவே வாடியுள்ள கொடியை அதன் அடிப்பாகத்தில் அறுப்பது போன்றதாகும்.

English meaning
Not to reconcile those who have feigned dislike is like cutting a faded creeper at its root. 

குறள் 1305:.
நலத்தகை நல்லவர்க்கு ஏஎர் புலத்தகை 
பூஅன்ன கண்ணார் அகத்து.

Tamil meaning
மலர் விழி மகளிர் நெஞ்சில் விளையும் ஊடலே பண்பார்ந்த நல்ல காதலர்க்கு அழகு சேர்க்கும். 

English meaning
An increased shyness in those whose eyes are like flowers is beautiful even to good and virtuous husbands. 

குறள் 1306:.
துனியும் புலவியும் இல்லாயின் காமம் 
கனியும் கருக்காயும் அற்று.

Tamil meaning
பெரும்பிணக்கும், சிறுபிணக்கும் ஏற்பட்டு இன்பம் தரும் காதல் வாழ்க்கை அமையாவிட்டால் அது முற்றிப் பழுத்து அழுகிய பழம் போலவும், முற்றாத இளம் பிஞ்சைப் போலவும் பயனற்றதாகவே இருக்கும். 

English meaning
Sexual pleasure, without prolonged and short-lived dislike, is like too ripe, and unripe fruit. 

குறள் 1307:.
ஊடலின் உண்டாங்கோர் துன்பம் புணர்வது 
நீடுவ தன்றுகொல் என்று.

Tamil meaning
கூடி மயங்கிக் களித்திருக்கும் இன்பமான காலத்தின் அளவு குறைந்து விடுமோ என எண்ணுவதால் ஊடலிலும் ஒருவகைத் துன்பம் காதலர்க்கு உண்டு. 

English meaning
The doubt as to whether intercourse would take place soon or not, creates a sorrow (even) in feigned dislike.

குறள் 1308:.
நோதல் எவன்மற்று நொந்தாரென்று அஃதறியும் 
காதலர் இல்லா வழி.

Tamil meaning
நம்மை நினைத்தல்லவோ வருந்துகிறார் என்பதை உணர்ந்திடும் காதலர் இல்லாத போது வருந்துவதால் என்ன பயன்?

English meaning
What avails sorrow when I am without a wife who can understand the cause of my sorrow? 

குறள் 1309:.
நீரும் நிழலது இனிதே புலவியும் 
வீழுநர் கண்ணே இனிது.

Tamil meaning
நிழலுக்கு அருகில் உள்ள நீர்தான் குளிர்ந்து இனிமையாக இருக்கும்; அதுபோல அன்புள்ளவர்களிடம் கொள்ளும் ஊடல்தான் இன்பமானதாக இருக்கும்.

English meaning
Like water in the shade, dislike is delicious only in those who love. 

குறள் 1310:.
ஊடல் உணங்க விடுவாரோடு என்நெஞ்சம் 
கூடுவேம் என்பது அவா.

Tamil meaning
ஊடலைத் தணிக்காமல் வாடவிட்டு வேடிக்கை பார்ப்பவருடன் கூடியிருப்போம் என்று என் நெஞ்சம் துடிப்பதற்கு அதன் அடங்காத ஆசையே காரணம்.

English meaning
It is nothing but strong desire that makes her mind unite with me who can leave her to her own dislike. 

No comments:

Post a Comment