குறள் 951-960 குடிமை

குறள் 951:.
இற்பிறந்தார் கண்அல்லது இல்லை இயல்பாகச் 
செப்பமும் நாணும் ஒருங்கு.

Tamil meaning
நடுநிலை தவறாத பண்பும், ஆரவாரமற்ற அடக்க உணர்வும் கொண்டவர்களையல்லாமல் மற்றவர்களை உயர்ந்த குடியில் பிறந்தவர்களாகக் கருத முடியாது. 

English meaning
Consistency (of thought, word and deed) and fear (of sin) are conjointly natural only to the high-born. 

குறள் 952:.
ஒழுக்கமும் வாய்மையும் நாணும்இம் மூன்றும் 
இழுக்கார் குடிப்பிறந் தார்.

Tamil meaning
ஒழுக்கம், வாய்மை, மானம் ஆகிய இந்த மூன்றிலும் நிலைதவறி நடக்காதவர்களே உயர்ந்த குடியில் பிறந்தவர்களாகக் கருதப்படுவார்கள். 

English meaning
The high-born will never deviate from these three; good manners, truthfulness and modesty. 

குறள் 953:.
நகைஈகை இன்சொல் இகழாமை நான்கும் 
வகையென்ப வாய்மைக் குடிக்கு.

Tamil meaning
முகமலர்ச்சி, ஈகைக்குணம், இனியசொல், பிறரை இகழாத பண்பாடு ஆகிய நான்கு சிறப்புகளும் உள்ளவர்களையே வாய்மையுள்ள குடிமக்கள் என்று வகைப்படுத்த முடியும். 

English meaning
A cheerful countenance, liberality, pleasant words, and an unreviling disposition, these four are said to be the proper qualities of the truly high-born. 

குறள் 954:.
அடுக்கிய கோடி பெறினும் குடிப்பிறந்தார் 
குன்றுவ செய்தல் இலர்.

Tamil meaning
பலகோடிப் பொருள்களை அடுக்கிக் கொடுத்தாலும் சிறந்த குடியில் பிறந்தவர்கள் அந்தச் சிறப்புக் கெடுவதற்கான செயல்களுக்கு இடம் தரமாட்டார்கள். 

English meaning
Though blessed with immense wealth, the noble will never do anything unbecoming.

குறள் 955:.
வழங்குவ துள்வீழ்ந்தக் கண்ணும் பழங்குடி 
பண்பில் தலைப்பிரிதல் இன்று.

Tamil meaning
பழம் பெருமை வாய்ந்த குடியில் பிறந்தவர்கள் வறுமையால் தாக்குண்ட போதிலும், பிறருக்கு வழங்கும் பண்பை இழக்க மாட்டார்கள். 

English meaning
Though their means fall off, those born in ancient families, will not lose their character (for liberality). 

குறள் 956:.
சலம்பற்றிச் சால்பில செய்யார்மா சற்ற 
குலம்பற்றி வாழ்தும்என் பார்.

Tamil meaning
மாசற்ற பண்புடன் வாழ்வதாகக் கருதிக்கொண்டிருப்பவர்கள், வஞ்சக நினைவுடன் தகாத காரியங்களில் ஈடுபடமாட்டார்கள். 

English meaning
Those who seek to preserve the irreproachable honour of their families will not viciously do what is detrimental thereto. 

குறள் 957:.
குடிப்பிறந்தார் கண்விளங்கும் குற்றம் விசும்பின் 
மதிக்கண் மறுப்போல் உயர்ந்து.

Tamil meaning
பிறந்த குடிக்குப் பெருமை சேர்ப்பவரிடமுள்ள சிறிய குறைகள், ஒளிவு மறைவு ஏதுமின்றி, வானத்து நிலவில் உள்ள குறைபோல வெளிப்படையாகத் தெரியக் கூடியதாகும்.

English meaning
The defects of the noble will be observed as clearly as the dark spots in the moon. 

குறள் 958:.
நலத்தின்கண் நாரின்மை தோன்றின் அவனைக் 
குலத்தின்கண் ஐயப் படும்.

Tamil meaning
என்னதான் அழகும் புகழும் உடையவனாக இருந்தாலும் அன்பு எனும் ஒரு பண்பு இல்லாதவனாக இருந்தால் அவன் பிறந்த குலத்தையே சந்தேகிக்க வேண்டிய நிலை ஏற்படும். 

English meaning
If one of a good family betrays want of affection, his descent from it will be called in question. 

குறள் 959:.
நிலத்தில் கிடந்தமை கால்காட்டும் காட்டும் 
குலத்தில் பிறந்தார்வாய்ச் சொல்.

Tamil meaning
விளைந்த பயிரைப் பார்த்தாலே இது எந்த நிலத்தில் விளைந்தது என்று அறிந்து கொள்ளலாம். அதேபோல் ஒருவரின் வாய்ச் சொல்லைக் கேட்டே அவர் எத்தகைய குடியில் பிறந்தவர் என்பதை உணர்ந்து கொள்ளலாம்.

English meaning
As the sprout indicates the nature of the soil, (so) the speech of the noble indicates (that of one's birth).

குறள் 960:.
நலம்வேண்டின் நாணுடைமை வேண்டும் குலம் 
வேண்டின் வேண்டுக யார்க்கும் பணிவு.

Tamil meaning
தகாத செயல் புரிந்திட அஞ்சி நாணுவதும், எல்லோரிடமும் ஆணவமின்றிப் பணிவுடன் நடந்து கொள்வதும் ஒருவரின் நலத்தையும் அவர் பிறந்த குலத்தையும் உயர்த்தக் கூடியவைகளாகும்.

English meaning
He who desires a good name must desire modesty; and he who desires (the continuance of) a family greatness must be submissive to all. 

No comments:

Post a Comment